ad

Wednesday, February 24, 2010

இதுவல்லவோ தீர்ப்பு................


மந்திரியான பிறகு -

சொந்த ஊருக்கு வந்தேன்;
பழைய தமிழாசிரியரைப்
பார்க்க நேர்ந்தது.
 
  'ஐயா ! என்னை

உருப்படாதவன்;
உதவாக்கரை;
ஊர்சுத்தி-
என்றெல்லாம்
அப்போது சொன்னீர்களே!
இப்போது
என்ன சொல்கிறீர்கள்
என்றேன்.
 
 
  தமிழாசிரியர்

தயங்காமல் பேசினார்;


'இப்போதும்
அதையேதான் சொல்கிறேன்'
என்று.
  நன்றி '(நிஜகோவிந்தம்)- கவிஞர் வாலி .